இன்று ஞாயிற்றுக் கிழமை(17.11.2013) காலை 9.30 மணியளவில் கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு தனியாருக்குச் சொந்தமான பஸ்வண்டிகள் இரண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்துச் சம்பவத்துக்கு காரணம் பஸ்வண்டி சாரதிகளின் முரண்பாடே காரணமாகும். இவ்விபத்துச் சம்பவத்தின் போது பஸ்வண்டிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பஸ்வண்டிச் சாரதிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் போக்குவரத்துப் பொலிசாரின் தலையீட்டுடன் வாக்குவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. வாகன சாரதிகளின் முரண்பாடுகளால் பல விபத்துக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது எடுக்கப்பட்ட படங்கள் சில
0 Comments