Advertisement

Responsive Advertisement

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளுக்கு விடுமுறையாம்!

கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நாளை 6 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 29 பாடசாலைகளும் 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மேலும் 6 பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாண்டுக்கான கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பாடசாலைகள் மூடப்படுவதனால் மாணவர்களின் பெறுபெற்றில் பின்னடைவு ஏற்படும் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



Post a Comment

0 Comments