Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்



செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்


எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட பூக்களில் ஒன்று,செம்பருத்தி. அவற்றில் சிலவற்றில் இங்கே அறிந்து பயன்படுத்துங்கள்... 


* உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித வியாதிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவை இட்டு, ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து விடும். சாதாரணக் காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம். 



* பால்வினை வியாதிகளில் ஒன்றான வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது. இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் பருக வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும். 



* இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. செம்பருத்திப் பூவை 250 கிராம் எடுத்துக் கொண்டு துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். 



பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி 'சர்பத்' தயாரித்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயமும் பலம் பெறும். 



* சில பெண்களுக்கு பேன் பெருந்தொல்லை அதிகம் இருக்கும். அவர்கள், செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று, நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு போன்றவை இருந்தாலும் நீங்கிவிடும். 



* சில குழந்தைகள் பிறக்கும்போதே பலவீனமாகப் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறை யைப் போக்கிட, ஐந்து செம்பருத்திப் பூக்களை ஒரு மண் பாண்டத் தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

Post a Comment

0 Comments