Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொதுநலவாய மாநாட்டில் கனேடிய பிரதமர் பங்கேற்க மாட்டார்

பொதுநலவாய மாநாட்டில் கனேடிய பிரதமர் பங்கேற்க மாட்டார்


இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளில் தான் கலந்துகொள்ளப்போவதில்லையென கனேடிய பிரதமர்  ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே தான் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தனக்கு பதிலாக கனேடிய சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் கலந்துகொள்வார் எனவும் கனேடிய பிரதமர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையானது 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்ட போது, அது தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் என கனடா நம்பியதாகவும் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லையெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும், சிவில் யுத்தத்தின் போதும் அதன் பின்னருமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான தரங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்பற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதுதவிர பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை, அரச தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மையினர், காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments