Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

15 வயதான சிறுமியை ஒன்பது நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது திருக்­கோவில் விநா­ய­க­பு­ரத்தில் சம்பவம்

15 வயதான சிறுமியை ஒன்பது நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது  திருக்­கோவில் விநா­ய­க­பு­ரத்தில் சம்பவம்


திருக்­கோவில் விநா­ய­க­பு­ரத்தைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 28 வய­தான நபர் ஒரு­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்து திருக்­கோவில்  பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். 
இச் சம்­ப­வம்­பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது,  அட்­டா­ளைச்­சேனை கோணா­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த 28 வய­தான ஒருவர் கடந்த மாதம் 26 ஆம் திகதி விநா­ய­க­புரம் நான்காம் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை அழைத்துச் சென்று சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் நண்பர் ஒரு­வரின் வீட்டில் வைத்து கடந்த 9 நாட்­க­ளாக பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த நிலையில் சிறு­மி­யுடன் சம்­ப­வ­தி­ன­மான கடந்த சனிக்­கி­ழமை இரவு 10.25 மணி­ய­ளவில் அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்­திற்கு வந்­தி­ருந்த­ போது அக்­க­ரைப்­பற்று பொலிஸார் குறித்த நப­ரையும் சிறு­மி­யையும் கைது செய்­தனர்.

இச் சம்­ப­வத்தில் கைது­செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ர­ணையின் பின்னர்  திருக்­கோவில் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர். இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட சிறு­மியை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­வர் தொடர்ந்து தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவரை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர் .

Post a Comment

0 Comments