Home » » திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு க. ஞானரெத்தினம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு க. ஞானரெத்தினம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு க. ஞானரெத்தினம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

(லோசன்) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு.க.ஞானரெத்தினம் அவர்களின்  ”ஆசிரியம் வெற்றிபெற” எனும் தலைப்பிலான நூல்வெளியீடு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வானது மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தில்  29.09.2013  ஞாயிற்றுக் கிழமை பி.ப. 2.50 மணி அளவில் இடம்பெறவுள்ளது.  இந்நிகழ்வை மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக உதவிப்பணிப்பாளர்  எந்திரி A.D. கமலநாதன் அவர்கள் தலைமையேற்று நடாத்தவுள்ளார்.  இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் எம். செல்வராஜா பீடாதிபதி, கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. கே. சத்தியநாதன், பிரதிக்கல்விப்பணிப்பாளர், மட்டக்களப்புக் கல்வி வலயம் அவர்களும்,  திரு எம். உலககேஸ்பரம் பிரதிக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்புக் கல்வி வலயம்  அவர்களும்  திரு.குலேந்திரகுமார்   பிரதிக்கல்விப் பணிப்பாளர், கல்குடா கல்வி வலயம் அவர்களும்  ஜனாப் எம்.எஸ்.நஜீம் பிரதிக்கல்விப் பணிப்பாளர் கல்முனை கல்வி வலயம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |