Home » » சொத்து விபரங்களை முன்வைக்க வேண்டியவர்கள் குறித்த புதிய பட்டியல் இதோ

சொத்து விபரங்களை முன்வைக்க வேண்டியவர்கள் குறித்த புதிய பட்டியல் இதோ

 


ஜனாதிபதி, பிரதமர், அரச உத்தியோகத்தர்கள், ஊடகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட நபர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசியல்வாதிகள் மற்றும் அரச சேவையில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (1,50,000) அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக் கடன் அறிக்கைகளைப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இயற்றப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 31 துறைகளைச் சேர்ந்த நபர்கள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |