நாட்டில் தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தான் சுடப்பட்டதாக தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
தனது கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,g
“இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள நடைமுறையின் கீழ் நான் தாக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். இந்த நடைமுறை தவறானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த முறை தவறானது என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும். நம் நாட்டின் சமூக அமைப்பும் தவறானது, அரசியலும் தவறானது. அந்தத் தவறினால்தான் இன்று நாடு முழுவதும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது”
0 Comments