Home » » என்னை உருவாக்கினாள் என் தாய்!

என்னை உருவாக்கினாள் என் தாய்!


(அன்னையர் தினம் மே 14)

தாயானவள் நாம் காணும் தெய்வமாக இவ் உலகில் பரிணிமித்து கடவுளாக மதிக்கப்படுகிறாள்.மண்ணில் பயிர் முளைக்க நீரும் , மண்ணும் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறதோ !  அதே போல் மனிதனின் பரிணிமிப்புக்கு தாய் விளங்குகிறாள். தாய் என்பவள் மானிடர்களாகிய நமக்கு மாத்திரம் இல்லாமல் விலங்குகளுக்கும் தாயின் முக்கியத்துவம் சிறப்பம்சமாகின்றது.தாயானவள் தெய்வங்களுக்கு அதிபதியாக விளங்குகின்றாள்.நித்தமும் கண்விளித்து , குடும்ப பொறுப்புக்களையும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் சிறப்பான முறையில் முடிக்கும் பெண் தாயே !

கணவரின் கடைகள் முதல் சமையலைறையின் அட்டகாசங்கள் , குழந்தை பராமரிப்பு போன்ற பல்வேறு விதமான வேலைகளை செய்து முடித்து விட்டு தானும் வேலை செய்கின்றாள்.நித்தமும் தன் நம்மை  பற்றி யோசித்து கொண்டிருக்கும் உறவு தாய். தாய்க்கும் பின்னர் தாரம் என்பார்கள் தாயுடன் குறிப்பாக 30 வருடங்களாக வாழ்கிறோம்.ஏனைய 30 வருடங்களை தாரத்திற்காக வாழ்கின்றோம்,அந்த இடத்தில் தாரமே தாயாக நம் கண்களுக்கு முன்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடவுளாக காணப்படுகிறாள் .


சில சினிமாப் பாடல்களிலும் கூட தாய் "சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா " ,அம்மா எனும் மந்திரமே உலகம் முழுதும் ஆழ்கிறதே போன்ற தாயைப்பற்றிய அமுத மொழிகள் வியாபித்துள்ளமை.

வார்த்தைகளால் கூறமுடியாத  கதாநாயகியாகவும்  அளவுகோல்களால் அளக்க முடியாத  அன்பாகனவளாகவும் . சுய நலம் இல்லாத இதயம் தன்னை விட தன் குடும்பத்தை நேசிப்பவளாகவும். வெறுப்பை காட்ட முடியாத தங்கச்சொரூபமாகவும் நடமாடுகிறாள் தாய்.

தன்னை அழகுப்படுத்தி பார்ப்பதை விட சமையலை அழகாக்கி நம்மை அழகு பார்க்கும் அந்த இளகிய இதயம் யாருக்கு இருக்கும் தாய்க்கே.உதாரணமாக பறவைகள் தங்களது குஞ்சுகளுக்கு தனது கூரிய சொண்டின் மூலம் அவதானமாக உணவூட்டுகிறது இதுவும் தாய்மையே ! .இதை விட சுவாரஸ்மான அம்சம் பசு தன்னுடைய கன்று எங்கே அம்மா அம்மா என அழைக்கிறதோ அங்கு வேகமாக ஓடி தனது கன்றுக்கு பால் கொடுக்கும். இதே போலவே தாய்மை என்பது பறவைகள், விலங்குகள் பாகுபாடின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் தாய்மை விளங்கி இருக்கும்.


தாயில் சிறந்த கோயிலும் இல்லை தப்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என முற்கால புராணங்கள் கூறுகின்றன. தாயின் கருவறை ஒரு சொர்க்க பூமியாக விளங்குகிறது.காலையில் படி .மாலையில் படி தன்னை போல் கஷ்ரமில்லாமல் தான் குழந்தை எதிர்காலத்தில் மிளிர வேண்டும் என்று தன்னைத்தானே தியாகம் செய்பவள். 

தன்னுயுர் போல் குழந்தையை காத்து நுட்டின் தலைசிறந்த ஒழுக்கமுள்ள பிரஜையாக வாழ வழிகாட்டுபவள். இவ்வாறு பல்வேறு இன்னல்கள் ,சவால்களுக்கு மத்தியிலும் உண்மையாய் கடவுளாய் தன் குழந்தையே பாதுகாக்கிறாள்.தாயின் மகத்துவம் இந்த உலகில் புரியாத ஜீவன்கள் வாழ முடியாது.


இவ்வாறு பல்வேறு விதமாக போற்றி வழிபடும்  தெய்வமாக காணப்படுபவள் என் தாய்.


✍️ஸோபிதன் சதானந்தம்

இளம் ஊடகவியலாளர்



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |