Home » » அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கவலை

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கவலை

 


நலன்புரி கொடுப்பனவுகளில் இருந்து அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்த்தன கவலை வெளியிட்டுள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அரச ஊழியர்கள் விலக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கவலை | Prime Minister About Government Servants

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர், இந்த கணக்கெடுப்புகளை நடத்துவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். 

அரச நிதி அமைச்சகம்

நலத்திட்ட உதவித் தொகை பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் ஆய்வுகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், சரியான தரவுகளை விரைவில் அதிகாரிகளுக்கு வழங்குமாறு அரச நிதி அமைச்சகம் விண்ணப்பதாரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கவலை | Prime Minister About Government Servants

இதுவரை பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களில் சுமார் 11 இலட்சம் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரர்கள் நலத்திட்ட உதவிகளை இழக்க நேரிடும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |