Home » » இலங்கை மாணவர்கள் 7 பேர் ரஷ்யப் படையினரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி

இலங்கை மாணவர்கள் 7 பேர் ரஷ்யப் படையினரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி


 கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ரஷ்யப் படையினரால் கார்கிவ் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகளை விடுவித்த பின்னர் உக்ரேனியப் படைகளால் இலங்கையர்கள், குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

7 இலங்கையர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இவர்களது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன . 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |