பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து சங்கத்தின் முக்கிய அறிவிப்பு
28-08-2022.*, ,
தமக்கு தேவையான டீசல் இன்று (28) கிடைக்காவிட்டால் நாளை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எரிசக்தி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments