Advertisement

Responsive Advertisement

“கோ-ஹோம்-ரணில்” போராட்டக்காரர்களுக்கு இடத்தை ஒதுக்கினார் ரணில்! முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார்

 


போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்றைய தினம் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் கடுமையான நிலைப்பாடு - ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட வைக்கப்பட்ட செக் 

ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்றம்

“கோ-ஹோம்-ரணில்” போராட்டக்காரர்களுக்கு இடத்தை ஒதுக்கினார் ரணில்! முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Go Home Ranil Protesters

மேலும் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றம் புது ஆரம்பத்துக்காக 24 மணிநேரம் ஒத்திவைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்ததாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். 

Gallery

Post a Comment

0 Comments