Home » » ஊரடங்கை மீறி சிறிலங்காவின் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள் !

ஊரடங்கை மீறி சிறிலங்காவின் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள் !

 


நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் சற்று முன்னர் போராட்டத்தில் மக்கள் இறங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

இன்றைய தினம் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற இருந்த நிலையில் திடீரென நேற்றைய தினம் இலங்கை முழுவதும் நேற்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தற்போது கொழும்பில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |