Home » » நெருக்கடியை தீர்க்க இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஆலோசனை

நெருக்கடியை தீர்க்க இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஆலோசனை


இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அறிவார்ந்தவர்கள் மூலம் அரசாங்கம் தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை வரலாற்றில் ஒவ்வொருவரினதும் குரல் தற்போது முக்கியமானதாக கருதப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் போராட்டக்காரர்கள் அமைதியாகவும், அவர்களது குரல்களை மாற்றத்திற்காகவும் ஒற்றுமைக்காகவும் உயர்த்துமாறு தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் பிரச்சினையை அடையாளம் கண்டு அதனை அறிவார்ந்தவர்கள் மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) வலியுறுத்தியுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |