Home » » கோட்டாபய அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

கோட்டாபய அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

 


நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது பயன்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கி இருந்த உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளர் பியத் பந்து விக்ரமவிடம் இன்று கையளித்துள்ளார்.

அமைச்சு பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்வதில்லை எனவும் முடிவு செய்திருந்த நிலையில், அமைச்சருக்கான சிறப்புரிமைகளை அனுபவிப்பது நியாயமற்ற செயல் என்று உணர்ந்ததன் காரணமாக அவற்றை திரும்ப ஒப்படைத்ததாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தான் பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தையும் அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாகவும் தனது பயணங்களுக்காக சகோதரரின் வாகனத்தையோ அல்லது நெருக்கமானவர்களிடம் வாகனம் ஒன்றை பெற்றுக்கொண்டோ பயன்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்பதால், அமைச்சு பணிகளில் இருந்து விலகிக்கொண்டேன். எனினும் அமைச்சு பதவியில் இருந்து விலகுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை  தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்க அரச தலைவர் அண்மையில் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சு பணிகளில் இருந்து விலகிக்கொண்டதுடன் அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்து இருந்தார்.  

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |