( தாரிக் ஹஸன்)
திருகோணமலை வலய கல்வி அலுவலகத்தில் நஞ்சற்ற முறையில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி அறுவடை இன்று ( 9 ) காலை நடைபெற்றது.
வலய கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க அதிதியாக கலந்து கொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்கா, சுகாதார அமைச்சு செயலாளர் திருமதி ஏ.ஜே.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டு அறுவடை செய்தனர்.
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் இங்கு நட்டுவைக்கப்பெற்ற பப்பாசி மரங்களுக்கான விதைகளை புத்தளம் மாவட்டத்தில் இருந்து பெற்றுக்கொடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் நஞ்சற்ற உணவு உற்பத்தி திட்டத்திற்கு அமைவாக அலுவலகங்களிலும் உணவுற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருகோணமலையில் வலய கல்வி அலுவலகம் இதற்கு முன்மாதிரியாக விளங்குகிறது
வலய கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க அதிதியாக கலந்து கொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்கா, சுகாதார அமைச்சு செயலாளர் திருமதி ஏ.ஜே.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டு அறுவடை செய்தனர்.
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் இங்கு நட்டுவைக்கப்பெற்ற பப்பாசி மரங்களுக்கான விதைகளை புத்தளம் மாவட்டத்தில் இருந்து பெற்றுக்கொடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் நஞ்சற்ற உணவு உற்பத்தி திட்டத்திற்கு அமைவாக அலுவலகங்களிலும் உணவுற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருகோணமலையில் வலய கல்வி அலுவலகம் இதற்கு முன்மாதிரியாக விளங்குகிறது
0 Comments