Home » » மட்டு. மாமாங்கம் பகுதியில் வியாபார நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையானது!

மட்டு. மாமாங்கம் பகுதியில் வியாபார நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையானது!

 


மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தீப் பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்து பொருட்களும் கருகி நாசமாகியுள்ளது.

வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தபோது அருகில் உள்ள பொதுமக்கள் இணைந்து தீயினைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தனர்.


குறித்த தீப்பரவல் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர் குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |