Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்றில் மாபெரும் புகைப்படத் திருவிழா ஆரம்பம்



( றம்ஸீன் முஹம்மட்)

புகைப்படத் திரு விழா இன்று அக்கரைப்பற்று மாநகர சபையின்  ஹல்லாஜ் மண்டபத்தில்  ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
Club Photo Ceylonica    ஏற்பாட்டில் கிழக்கு  பிராந்திய புகைப்பட கலைஞர்களின் திறமைகளை போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் வாயிலாக வெளிக்கொணர்ந்து அவர்களைப் பாராட்டி கௌவித்து ஊக்குவிக்கும் வகையில் இக்கண்காட்சி  ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றது.
இத்  திருவிழாவில் சர்வதேச புகைப்படப் போட்டிகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்களிடையே வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்கள், அக்கரைப்பற்று வரலாற்றுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்...
புகைப்படக் கலைஞரும் விழா ஏற்பாட்டாளருமான அப்துல் ஹமீட் தாஹிர் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் புகைப்படத்திரு விழா  இறுதி தினமான நாளை போட்டி  நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு  விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Post a Comment

0 Comments