Advertisement

Responsive Advertisement

உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

 


கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரம், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிடப்பட்ட திகதிகளில் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும் என  கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

மேலும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கும்  நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதி அளித்துள்ளார். 

Post a Comment

0 Comments