Home » » மட்டக்களப்பு பார் வீதியில் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட மேலுமொருவர் பலத்த காயம்

மட்டக்களப்பு பார் வீதியில் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட மேலுமொருவர் பலத்த காயம்

 


மட்டக்களப்பு பார் வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட மேலுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பார் வீதி பகுதியில்  நேற்று பிற்பகல் மட்டக்களப்பு நகர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்களுடன் மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த கார் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வாகன போக்கு வரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த பாடசாலை மாணவன் உட்பட மாணவனின் உறவினர் ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளன நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்கு வரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |