Advertisement

Responsive Advertisement

நாடு முழுவதும் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 


அதிபர்கள் – ஆசிரியர் பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.


சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்- ஆசிரியர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் இன்று நாடு முழுவதும் இடம்பெற்றன.

ஆசிரியர்களுக்கு ஒன்லைன் மூலம் கற்பித்தல் தொடர் பான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும். சகல மாணவர்களுக்கும் ஒன்லைன் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங் களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளில் கற்பித்தல் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் ஏராளமான அதிபர், ஆசிரியர்கள் போராட்டத் தில் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments