Home » » பயிலுனர் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

பயிலுனர் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 


தற்போது அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது. 53 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 18,000 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

இதன்காரணமாக அந்த பணிகளை விரைவுபடுத்தி, ஏனையவர்களையும் அரச சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறு ஜனாதிபதி இதற்குப் பொறுப்பான அமைச்சர்களை பணித்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |