அதிகரித்துச் செல்லும் விலையை கட்டுப்படுத்த அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி, நாளைய தினம் (02) முதல் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைத் தெரிவித்தார்.
0 Comments