Home » » விமான நிலையங்கள் திறக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!

விமான நிலையங்கள் திறக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!

 


இலங்கை விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்படுமா? அல்லத இன்று திறக்கப்பட உள்ளதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் தேசிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் தொடர்வது மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், இலங்கைக்கான அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் மே 21 நள்ளிரவு முதல் 14 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சிவில் விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்திருந்து.

இருப்பினும், நாட்டிலிருந்து புறப்படும் பயணிகள் விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |