Home » » சீனாவின் திட்டமிட்ட சதி! அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்

சீனாவின் திட்டமிட்ட சதி! அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்



கொரோனா வைரஸ் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டது என்றும், கொரோனா பெருந்தொற்றானது சீனாவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் லு-மெங் யான் அம்பலப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் சீனாவின் சதியோ கொரோனா வைரஸ் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல முறை குற்றம்சாட்டியிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக டொக்டர் லு-மெங் யான் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடும் போது, மூன்றாம் உலகப்போர் மூளும் நிலை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும் உலகை வெற்றி கொள்ளும் பொருட்டு புதுமையான உயிரியல் ஆயுதத்தை சீனா உருவாக்கியுள்ளது.

தற்போது இந்த ரகசியங்கள் அமெரிக்காவிடம் சிக்கிய ஆவணங்களால் அம்பலமாகியுள்ளதாகவும், இது சீனாவுக்கு பின்னடைவாக மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கொரோனா தொற்று மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்தவே உருவாக்கப்பட்டது, சீனா திட்டமிட்டே அதை பரவ அனுமதித்தது. அதிக உயிர்ப்பலி வாங்கும் நோக்கில் கொரோனா தொற்று வடிவமைக்கப்படவில்லை, ஆனால் எதிரி நாடுகளின் சுகாதார அமைப்பை மொத்தமாக சிதைக்க வேண்டும், அதனால் சமூக அமைப்பு பாதிப்புக்கு உள்ளாக வேண்டும் என்பதே சீன நிர்வாகத்தின் திட்டமாகும்.

இதையே, வூஹான் நகரில் அவர்கள் சோதனை முயற்சியாக முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளனர். அதன் காரணமாக வுஹான் நகரம் மொத்தமாக ஒடுங்கிப்போனது.

5 முதல் 6 ஆண்டுகள் கணக்கில்லாத தொகை செலவிட்டு உருவாக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தொடர்பில் ராணுவ விஞ்ஞானிகளுக்கு பங்கிருப்பது என்பதை நிரூபிக்க முடியும் அதை சீனாவால் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |