ஐந்து மாவட்டங்களில் உள்ள 09 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவும், களுத்துறை மாவட்டத்தில் பொம்புவல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் எல்தெனிய - பல்லி வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் கங்குல்விட்ட கிராம சேவகர் பிரிவும், இரக்குவானை காவல் பிரிவில் பொதுபிட்டிய வடக்கு மற்றும் கலவான காவல் பிரிவில் உள்ள ஹபுகொட கிராம சேவகர் பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நோர்வூட் பொலிஸ் பிரிவிலும், ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள ஃபோர்டிஸ் தோட்டத்தின் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
0 comments: