Home » » வாழைச்சேனையில் 66 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை- இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வாழைச்சேனையில் 66 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை- இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வியாழக்;கிழமை அறுத்தியாறு (66) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மருதநகர் கிராமம் முடக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்றவர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் நேற்று புதன்கிழமை மாலை வெளியான தரவின் படி ஒன்பது பேர் அமைடயாளம் காணப்பட்ட நிலையில் இவர்களது நெருங்கிய உறவுகள் பதினாறு பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாசிவந்தீவு கிராமத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் ஒரு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இங்கு கடமையாற்றும் ஐம்பது பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் என்பன இடம்பெற்று வருகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |