Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது!!

 


நாடுபூராகவும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தானது பொலிஸாரால் மறுக்கப்பட்டு சாரதி மற்றும் பயணம் செய்த 48 பேர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த பேருந்தானது அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையிலேயே குறித்த தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த பேருந்து, இங்கினியாகலா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு (30) காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments