Home » » ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்

ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்

  


எம்.ஐ.எம்.அஸ்ஹர் )


அதிமேதகு ஜனாதிபதி கோடபாய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கரு விற்கு அமைவாக , ஒரு இலட்சம் கிலோமீட்டர்  
 வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் , கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய கெளரவ நீதியமைச்சரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான கெளரவ அலி சப்ரி அவர்களின் சிபார்சின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வருமான  றிஸ்லி முஸ்தபா அவர்களின் பெரு முயற்சியால் கல்முனை தொடக்கம் காரைதீவு வரையிலான கடற்கரை வீதிக்கு கார்பெட் இடும் பணி இன்று(8) கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்றலில் றிஸ்லி முஸ்தபா  தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நெடுஞ்சாலைகள் அமைச்சு , கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் அடிப்படையில் கல்முனை , சாய்ந்தமருது ,மாளிகைக்காடு , காரைதீவு ஆகிய பிரதேசங்களைை  உள்ளடக்கியகடற்கரை வீதி கார்பட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |