Advertisement

Responsive Advertisement

பூம்புகார் முடக்கம் ! திருகோணமலையில் 67 தொற்றாளர்கள்!

 


திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம வேசகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. பட்டிணமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபைக்குட்பட்ட இப்பகுதி உப்புவெளி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்கு உட்பட்டது.


குடைமாதா சந்தியில் உள்ள ரயில்வே கடவைக்கு அருகாமையிலும் அப்பகுதிகுள் உள் நுளையும் மற்றும் இரு இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சேதனைச் சாவடி அமைக்கபட்டு, பொதுமக்கள் வெளியேரவோ அல்லது புதிய நபர்கள் உள் நுளையாமலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இப்பகுதியில் ஆன்டிஜன் பரிசோதிக்கப்பட்டவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.

திருகோணமலை நகராட்சி மன்றம், பொது வைத்தியாலை, உப்புவெளி பிரதேச சபை, அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் போன்ற அத்தியாவசிய சேவையில் உள்ள பலர் இப்பகுதி முடக்கத்தில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொரொனா பாதிப்பின் இரண்டாம் அழையின் போதும் இப்பகுதி முற்றாக முடக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (27) மாத்திரம் 67 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா, இன்று (28) தெரிவித்தார்.

இதன்படி, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் 31 பேரும், திருகோணமலையை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் 27 பேரும், கிண்ணியா பிரதேசத்தில் 5 பேரும், குறிஞ்சான்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதி மற்றும் தம்பலகாமத்தில் தலா ஒருவரும், கந்தளாயில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments