Home » » 05 உடும்புகளுடன் ஒருவர் கைது! ஒரு இலட்சம் ரூபா சரீர பிணை!

05 உடும்புகளுடன் ஒருவர் கைது! ஒரு இலட்சம் ரூபா சரீர பிணை!

 


கிளிநொச்சி – வட்டக்கச்சி, புதுக்காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சியாக்குவதற்கு தயாராக வைத்திருந்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டு 5 உடும்புகளை மீட்டு சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கிளிநொச்சி நீதவானின் உத்தரவிற்கமைய, உடும்புகள் சுண்டிக்குளம் சரணாலயத்தில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |