க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான மாதங்களை மாற்ற கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கான புதிய திட்டத்தை அடுத்த வாரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்த எதிர்பார்ப்பதாக கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
0 comments: