நடைபெற்று வரும் 2020 ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வலஸ்முள்ள பகுதியில் உள்ள பாடசாலையில், தனிப்பட்ட பரிட்சாத்தியாக பரீட்சையில் பங்கேற்ற மாணவன் ஒருவன், மற்றொரு மாணவனுக்காக பரீட்சை எழுதியுள்ளதாக பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவன் நேற்று வலஸ்முள்ள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் பரீட்சை எழுதியுள்ள நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவனை இன்று நீதிமன்னத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments