Home » » மான் இறைச்சி மற்றும் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது..!!

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது..!!


 இறக்குவானை பகுதியில் 22 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடமிருந்து 12 உள்ளூர் துப்பாக்கிகளும் 12 நேரடி வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்திய வண்டியும் பொலிஸ் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் 52 - 65 வயதுக்குட்பட்ட இறக்குவானை மற்றும் இரத்தினபுரி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |