Home » » குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு- மாணவியெடுத்துள்ள விபரீத முடிவு!

குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு- மாணவியெடுத்துள்ள விபரீத முடிவு!

 


தலைவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர் 16 வயதுடைய ரத்மில்லகெலே ஜனபதய பகுதியை சேர்ந்த நாராயணசாமி முனுசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவியின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இன்று ஆறுமுப்பது மணியளவில் குறித்த நீர்த்தேகத்தில் குதித்துள்ளதாகவும், அதனைக் கண்ட பொது மகன் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த யுவதியின் சடலம் இன்று காலை 9.00 மணியளவில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |