Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு செங்கலடி உதயசூரியன் உதவிக்குழுவினரால் டெங்கு நுளம்பு ஒழிப்பு சிரமதானப்பணி!!



(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு செங்கலடி உதயசூரியன் உதவிக்குழுவினரால் டெங்கு நுளம்பு ஒழிப்பு சிரமதானப்பணி இன்று ஏறாவூர் எல்லை நகர் பகுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்குநோய்த்தாக்கத்தாலும் குறிப்பாக செங்கலடி பிரதேசத்திலும் குறித்த டெங்கு நோயின் அறிகுறிகள் காணப்படுவதாலும் செங்கலடி பொதுசுகாதார அலுவலகத்தினால் பரவலாக டெங்கு நோய் தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந் நிலையில் செங்கலடி பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களின் கோரிக்கைக்கமைய செங்கலடி உதயசூரியன் குழுவினர் இன்று சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

வீடுகள், கடைகள், கவணிப்பற்றுக்கிடக்கும் காணிகள், நீர்நிலைத் தேக்கங்கள் ஆகிய பல இடங்களில் குறித்த சிரமதானப்பணி இடம்பெற்றிருந்ததுடன், செங்கலடி பொது சுகாதார பரிசோதகர்களான எஸ்.தவேந்திரராஜா மற்றும் எம்.ஐ.மொகமட் பஸ்மி ஆகியோரும் தமது பூரண ஒத்துழைப்பிணையும் இச் சிரமதானப்பணிக்கு வழங்கியிருந்தனர்.

வீடுகளில் பிளாஸ்டிக்பொருட்களில் நீர்தேங்கியிருத்தல் மற்றும் கிணறுகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்டபாகவும் பொதுசுகாதார பரிசோதகர்களினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் உதயசூரியன் குழுவினரால் மேலும் சில பிரதேசங்களில் சிரமதாணப்பணியிணை தொடரவுள்ளனர்.

மேலும் குறிப்பாக செங்கலடிப் பகுதியின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெங்குநோய் தாக்கத்தினால் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தகதாகும்.

Post a Comment

0 Comments