Home » » பேக்கரி உற்பத்திகளின் விலை விரைவில் அதிகரிக்கும்- பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!!

பேக்கரி உற்பத்திகளின் விலை விரைவில் அதிகரிக்கும்- பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!!

 


இலங்கையில் பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது.


பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், பாண், பணிஸ் உள்ளிட்டவை குறைந்தபட்சம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பார்ம் எண்ணெய்க்கு ஒரு லீற்றருக்கு 250 ரூபா வரி அறவிடப்படும் நிலையில், அதன் விலை 500 ரூபாவாகவும், மாஜரின் ஒரு கிலோவுக்கு 600 ரூபா வரி அறவிடப்படும் நிலையில் 1000 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்காமல் இருப்பது சாத்தியமற்றது என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பேக்கரி பண்டங்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க, சலுகைகளை க்கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கோரிக்கைகளை முன்வைத்த போதும் அவர்கள் அதற்கான எந்த பதில்களையும் இதுவரை வெளிப்படுத்தாமையால், பேக்கரி பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |