மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், சதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கபட்டுள்ளன.
இந்த நிலையில், ஏனைய வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில், பாடசாலைகளை படிப்படையாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்களுடன் தொடர்புகளை கொண்டிருக்க கூடியவர்களாக ஆசிரியர்கள் காணப்படுவதன் காரணமாக அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.
இதன்படி, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments