அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு பயணிக்கும் தனியார் பஸ் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வறக்காப்பொலயைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பீ.சி.ஆர் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பறூஸா நக்பா் இன்று (19)தெரிவித்தார்.
இதையடுத்து கல்முனை பிராந்திய கசுகாதாரப் பணிப்பாளா் ஜி.சுகுணனின் ஆலோசனையின்படி அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த ஏனையோரை தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் குழாம் விரைந்துள்ளனா்.
ஏற்கனவே தென் பகுதியிலிருந்து வந்த மாங்காய் கொள்வனவு செய்ய லொறி சாரதியுடன் வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து அக்கரைப்பற்றில் அவர் மாங்காய்களை கொள்வனவு செய்த மூன்று குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அத்துடன் அவருடன் இணைந்து வந்திருந்த தென் பகுதியைச் சேர்ந்த மேலும் 19 பேர் இறக்காமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் மாதிரிகளும் இன்று பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கல்முனைப் பிராந்தியத்தில் வாழும் சகலரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு சுகாதார விதிகளை மிகவும் இறுக்கமாக கைக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவா் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments