ஓமோன் நாட்டில் இருந்து வருகை தந்த 254 பேர், 11 பேருந்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் 25 பேரை கொண்டு யாழ்நோக்கி சென்ற பேருந்து இன்று காலை 8.00 மணியளவில் பச்சிலைப்பள்ளி அரசர் கேணி பகுதியில் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மூவர் யாழ்.போதன வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: