Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்றாளர்கள் 274 பேர் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 22775ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 274 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்களே இன்று இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில், இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்க்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக அதிகத்துள்ளது.

இந்த நிலையில், 6 ஆயிரத்து 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments