Home » » கொரோனா தொற்றுள்ள பெண் பிரசவித்த குழந்தையின் பரிசோதனை முடிவு வெளியானது

கொரோனா தொற்றுள்ள பெண் பிரசவித்த குழந்தையின் பரிசோதனை முடிவு வெளியானது

நாட்டில் முதன் முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 10ஆம் திகதி டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த கர்ப்பிணிப் பெண் கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

இதனையடுத்து, அந்தப் பெண்ணின் பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்பின்னர் கொழும்பு கிழக்கு மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் அவர், கடந்த 23 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை குழந்தையைப் பிரசவித்தார். இதன்போது, சிகிச்சையில் மருத்துவர்கள் உட்பட 35 மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, குழந்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய குழந்தையின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டன.

இந்நிலையில், அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |