இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் ஜூன் மாதம் திறப்பது தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்திகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம் மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளின்படி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்திகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம் மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளின்படி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments: