Home » » ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி பொருளாளர் ஏ.சி.யஹ்யாகான் ஊடகஙடகளுக்கு வழங்கியுள்ள செய்தி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி பொருளாளர் ஏ.சி.யஹ்யாகான் ஊடகஙடகளுக்கு வழங்கியுள்ள செய்தி

(  அஸ்ஹர் இப்றாஹிம்)

எதிர்வரும்  பொதுத் தேர்தலில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போடப்பட்டுள்ள சகல வேட்பாளர்களும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலனுக்காக வெல்ல வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி பொருளாளர்  ஏ.சி.யஹ்யாகான் ஊடகஙடகளுக்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ,
  இன்று நாளுக்கு நாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி தேசிய ரீதியில்  அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. எமது சமூகத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள்  மிகவும் பேசுபொருளாக இன்று மக்கள் மத்தியில்  மாறியுள்ளது .அதனால் எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் , கட்சியை அழிப்பதற்கு யார் யார் முயற்சி செய்தாலும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
திடமான தலைமைத்துவத்தின் கீழ்   தைரியமும் திறமையுமுள்ள வேட்பாளர்கள் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளதால் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றியடைவது உறுதியாகி விட்டது.
 ஏனைய முஸ்லிம் கட்சிகளை விட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் முக்கியமாக இந்த சமூகத்திற்கு அமையும் என்பது மக்களிடையேயுள்ள  நிலைப்பாடாகும் அதனால் நாம் எமது மக்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் சமூகத்தை சமூக விரோத சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்காக முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பிரதேச  பேதமின்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளிலிருந்து முடங்கி கிடப்பதால் பொருளாதார ரீதியில் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதனால் எமது தலைமையும் கட்சி போராளிகளும் மக்களை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான சகல உதவிகளையும் கட்சி வேட்பாளர்களினூடாக செய்து வருவதோடு எமது சமூகத்திற்கு எதிராக முடக்கி விடப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடுகளுக்காக குரல் கொடுத்தும் வருகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |