Home » » திடீரென உயிரிழந்த முதியவர்! கொரோனா என சந்தேகம்

திடீரென உயிரிழந்த முதியவர்! கொரோனா என சந்தேகம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கஹதுடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் இதை நேற்று தெரிவித்துள்ளது.
கொழும்பு - மேட்டெகொட வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 67 வயதான ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி மாலைதீவிலிருந்து இலங்கைக்கு வந்தார்.
பொது சுகாதார அதிகாரிகள் அவரது சடலத்தை பார்த்ததாகவும், இவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் எனவும் கஹதுடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இவரது மரணம் தொடர்பான அறிக்கை வரும் வரை அந்த வீட்டிலிருப்பவர்களை சுய தனிமைக்குள்ளாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |