Home » » கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் பெற்றோரிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் பெற்றோரிடம் விடுத்துள்ள வேண்டுகோள்


கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் பாடசாலை அதிபர், ஆசிரியர், வலயக்கல்வி அலுவலகம், மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5, க.பொ.த சாதாரண தர, க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான கற்றல் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்தினாலும், வலயக் கல்வி அலுவலகங்களினாலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கபபட்டு வருகின்றன.
இதுவரையில் இந்த சேவைகளைப் பூரணமாக தங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் தங்களுடைய வகுப்பாசிரியருடனோ, அதிபருடனோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளருடனோ தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரங்களை பெற்று பிள்ளையின் கல்வியை விடுபடாமல் நடைபெறுவதற்குரிய ஏறபாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |