கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் பணியில் பிரிட்டனும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்த தொடர்பில் பிரிட்டன் அரசின் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு குழுவின் உறுப்பினர் ஜான்பெல் கூறியதாவது,
“மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி சோதனை தொடங்கியிருக்கின்றது.
மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி சோதனையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொடங்கி விட்டது.
தடுப்பு ஊசி கண்டுபிடிப்பது என்பது முக்கியம் அல்ல. அது எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது விஞ்ஞானிகளின் தற்போதைய கவலையாக இருக்கிறது.
இந்த பரிசோதனை ஆகஸ்ட் மாத மத்தியில் நிறைவடையும்” என்று கூறினார்.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, “எதிர் காலத்தில் கொரோனா வைரஸ் எந்தவிதமான மரபியல் மாற்றங்களுடன் உருவெடுத்தாலும் அதை தடுக்கும் வகையில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது” என்றனர்.
0 comments: