கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் அதிகரித்துவருகின்றது.
உலகளவில் 65000 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.
200 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் திணறுகின்றன.
இந்நிலையில் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கடந்த மாதம் 24 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
0 comments: