கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.
இதன்படி இன்று சிலர் இலங்கைக்கு வர உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களே இன்று அழைத்துவரப்பட உள்ளனர்.
எனினும் இவ்வாறு அழைத்து வரப்படும் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வெளிநாடுகளில் சுமார் 5000 இலங்கையர்கள் சிக்கியிருப்பதாகவும் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் முதற்கட்டமாகவே இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்
0 comments: